ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகவல் பகுப்பாளர் (1 பணியிடம்)
தொகுப்பூதியம் - ரூ.18,536/-
- புள்ளியியல், கணிதம், பொருளியல் மற்றும் Computer (BCA) ஆகிய ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் (10+2+3 மாதிரி) பெற்றிருக்க வேண்டும்.
- தகவல் பகுப்பு பணியில் முன் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்
- 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
மேற்ண்ட பதவிக்கான விண்ண ப்படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் OR - 09-2022 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E-1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி - 620 001. தொலைபேசி எண்: 0431-2413055.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :
1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்.
2) சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல்.
3) சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல்.