விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ! தமிழக விவசாயிகளுக்கு புதிய திட்டம் 10,000 மானியம் | ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நமது தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்படும் வகையில் இந்த திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் முற்றிலும் விவசாய நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு மானிய தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை இன்று வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
மணியத்தொகை :
தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக அரசு வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வேளாண் தொழிலை வளர்ச்சி நோக்கி கொண்டு செல்லும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்கள் இடம்பெற்றிருந்தது.
இந்த அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் நல்லதொரு வரவேற்பையும் பெற்றிருந்தது அதன் தொடர்ச்சியாக தற்போது சிறுகுறி விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட்டு வாங்க மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை என்று அமைச்சர் ஆர் கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறையின் அனுமதி பெற்று புதிய மின் மோட்டார் பம்பு செட் வாங்கும் விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சொந்தமாக மின் இணைப்பு வைத்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் கீழ் பயன்படலாம் இத்திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நேரடியாக ஆன்லைனில் உங்களுடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் இதைப் பற்றி மேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள எனக்கு தொடர்பு கொள்ளலாம். 044 2951 0822.
இந்த பதிவை படித்துவிட்டு உங்கள் விவசாய சொந்தங்கள் அனைவருக்கும் பகிருங்கள் நன்றி..