11ம்,12ம் வகுப்பு மாணவர்கள் தனித்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?
நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு (.2) துணைத் தேர்வுகளுக்கு, மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும், விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும், இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பள்ளிமாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் :-
மார்ச்/ஏப்ரல்2023 மேல்நிலை முதலாம் ஆண்டு (1 Arrear)/ மேல்நிலை இரண்டாம் ஆண்டு (2) பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 11.05.2023 (வியாழக்கிழமை) முதல் 17052023 (புதன்கிழமை ) வரையிலான நாட்களில் (14,05.2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மா லை 5,00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஜூன்/ஜூலை 2023 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச்/ஏப்ரல் 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு (1 Arrear) பொதுத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத மேல்நிலை இரண்டாம் ஆண்டு (2) தனித்தேர்வர்களும் 11.05.2023 (வியாழக்கிழமை) முதல் 17.05.2023 (புதன்கிழமை ) வரையிலான நாட்களில் (14.05,2023 ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.
கடந்தாண்டுகளில் மேல்நிலை முதலாமாண்டு (1) / மேல்நிலை இரண்டாமாண்டு (.2} தேர்வெழுதி தேர்ச்சி பெறாத தேர்வர்கள் அனைவரும், தற்போது, தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் விண்ணப்பிக்கலாம்.